பரபரப்பான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!
12 view
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் 162 ஓட்டங்களையும் நஜிபுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் அசித்த பெனார்டோ மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை…
The post பரபரப்பான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரபரப்பான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
