தீக்காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள்! – வைத்திய நிபுணர் வேண்டுகோள்
6 view
தீ, மின்சாரம், மின்னல் தாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எரி காயங்களுக்கு வீட்டி வைத்தியம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளை தவிர்க்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி இளாஞ்செழிய பல்லவன் வேண்டுகோள் விடுத்தார். வடமாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற எரி காயங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அயலவர்கள் கூறும் வைத்தியம் அல்லது அவர்களில் வீட்டில் உள்ளவர்கள் கூறும் பேஸ்ட் பூசுதல், கற்றாழை பூசுதல், மழை நீர் ஊற்றுதல் ஜஸ் கட்டி வைத்தல் போன்ற செயற்பாடுகளை செய்யவது அறிவார்ந்த சமுதாயத்துக்கு உகந்ததல்ல. ஏனெனில் சிறு வயதில் கற்றிருப்போம் உலோகங்கள் வெப்பத்தை கடத்தும் என ஆனால் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தப்படும் அகப்பை வெப்பத்தை கடத்தாது. வீட்டு வைத்தியம் என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் மேலே குறிப்பிட்ட முறைகள் அனைத்தும் வெப்பத்தை வெளியேற விடாமல் காயத்துக்கு…
The post தீக்காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள்! – வைத்திய நிபுணர் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீக்காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள்! – வைத்திய நிபுணர் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
