நாட்டின் எரிபொருள் கையிருப்பு! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
15 view
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் எரிபொருள் இருப்பு வலுவான நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, இன்றைய நிலவரப்படி, 83,236 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல், 9955 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 20,640 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் 18,354 மெட்ரிக் தொன் ஒக்டேன் பெட்ரோல் 95 பெட்ரோல்கள் என்பன கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 10,022 மெட்ரிக் டன் ஜெட் எரிபொருள் நாட்டின் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஜெட் எரிபொருள் கப்பல்களுக்கான பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளின் முழு அளவையும் விநியோகிக்க…
The post நாட்டின் எரிபொருள் கையிருப்பு! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் எரிபொருள் கையிருப்பு! பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
