கனேடிய மாகாணம் ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 30,000 பேர் இருளில் தவிப்பு!
7 view
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு கடற்கரையில் பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் அலெக்ஸ் ஃப்ரேசர் பாலம், கடும் பனியால் பல வாகன விபத்துகளை ஏற்படுத்தியதால் நேற்று இரவு மூடப்பட்டது. இன்றும் பனிப்பொழிவு தொடரும் என்றும், மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மக்கள் பயணத்தை முடிந்தவரை தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வான்கூவர் மற்றும் அபோட்ஸ்போர்ட் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்கூவர் விமான நிலையம் பயணிகளை சரியான முறையில் புறப்பாடுகளைச் சரிபார்த்து, தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இந்நிலையில், நேற்று மாலை 7.00 மணியளவில், வான்கூவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து…
The post கனேடிய மாகாணம் ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 30,000 பேர் இருளில் தவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனேடிய மாகாணம் ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 30,000 பேர் இருளில் தவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
