2023 இல் மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி: மின்சார சபை
6 view
ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட இது போதாது எனவும், எனவே கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உப குழுவில் இந்த விடயம் வெளியிடப்பட்டது. அதன்படி, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சாரத் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்காக மின் துறையுடன் தொடர்புடைய அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குழுவின் முன் அழைக்கப்பட்டன. இழப்பை ஈடுகட்ட, மின் கட்டணத்தை 70%…
The post 2023 இல் மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி: மின்சார சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023 இல் மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி: மின்சார சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
