இந்தியாவுக்கு தல யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
6 view
இந்தியாவுக்கு தல யாத்திரைகள் செல்ல இருப்பவர்கள் சுகாதார முற்பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி மலேரியா தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாக்க வேண்டுமெனயாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திக் குறிப்பில், இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத்தொற்று பரவவில்லை எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியா தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவாலாகும். எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு ஐயப்பன் தல யாத்திரைக்கோ அல்லது…
The post இந்தியாவுக்கு தல யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவுக்கு தல யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
