சுங்கத்தின் தடுப்பில் பால்மா – அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா இழப்பு
6 view
தெளிவுப்படுத்தாமல் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள பால்மா தொகையை தடுத்து வைத்துள்ளமையால், அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா வரி பணம் கிடைக்காது போயுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட 4 லட்சம் கிலோகிராம் பால்மாவை விடுவிக்காது சுங்கம் தடுத்து வைத்துள்ளதன் காரணமாக அந்த பால்மா நுகர்வுக்கு பொருத்தமற்றதாக மாறக்கூடும் என அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் அங்கத்தவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்திருந்தார். அது தொடர்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுங்க திணைக்களம், லக்ஷ்மன் வீரசூரியவிற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட 6 கொள்கலன் பால்மா கடந்த 14 ஆம் திகதி மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இறக்குமதி சட்டத்திட்டங்களை மீறி சட்டவிரோதமாக பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
The post சுங்கத்தின் தடுப்பில் பால்மா – அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா இழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுங்கத்தின் தடுப்பில் பால்மா – அரசாங்கத்திற்கு 145 மில்லியன் ரூபா இழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
