மசாஜ் செய்ய சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!
6 view
பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, Body Massage செய்ய சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, Mobile Body Massage சேவையை பெற்றுக்கொள்ள இளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்குவைத்து இளைஞன் தாக்கப்பட்டு, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள், களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேகநபர்கள் முகநூல் பக்கத்தில் பெண்களைப் போன்று வேடமணிந்து “Mobile Body Massage” செய்வதாக விளம்பரம் செய்து நாகசந்தியா கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, வஸ்கடுவ வாடியமன்கட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும்கூறியுள்ளனர். மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை…
The post மசாஜ் செய்ய சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மசாஜ் செய்ய சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
