15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
6 view
பொலனறுவை – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த சிறை தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பொலனறுவை மேல்நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 364 (2) (e) மற்றும் 364 (3) இன் படி, குற்றம்சாட்டப்பட்டவர் 2015 ஆகஸ்ட் 1 மற்றும் ஜனவரி 31, 2016 க்கு இடையில் பொலன்னறுவை மேல் நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட நிஷ்ஷங்கமல்புரவில் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். பொலன்னறுவை உயர் நீதிமன்றம் குற்றம்…
The post 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
