இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்பிலான இந்திய ருபாவை வைத்திருக்கலாம்
30 view
இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாயை மற்றொரு நாணயமாக மாற்றிப் பயன்படுத்த முடியும் என்றும், இதை செயல்படுத்துவதற்கு, இலங்கையில் உள்ள வங்கிகள் இந்திய வங்கியுடன் “INR நொஸ்ட்ரோ கணக்குகளை” ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை வங்கிகளின் கடல்கடந்த வங்கி அலகுகள் (OBU) வதிவிடமில்லாதவர்களிடம் இருந்தும் சேமிப்பு மற்றும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றொரு முக்கியமான அம்சமாகும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும்…
The post இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்பிலான இந்திய ருபாவை வைத்திருக்கலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்பிலான இந்திய ருபாவை வைத்திருக்கலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
