இளைஞன் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
29 view
யாழ்ப்பாணம் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். மானிப்பாய் ஆலடி சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் குறித்த…
The post இளைஞன் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞன் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
