அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை இயற்றாமையால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது: பந்துல
25 view
நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதும் அது முழுமையற்றதாக காணப்படுகிறது. பொருளாதார பாதிப்பினால் எமது வீடுகள் மாத்திரமே இறுதியில் தீக்கிரையாக்கப்பட்டன. அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை இயற்றாததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஆகவே இனியாவது இச்சட்டத்தை இயற்றிக் கொள்ள அவதானம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவ. 28) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு 1.4 சதவீதத்தினால் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. அக்காலப்பகுதியில் நாட்டின் அன்றாட தேவைக்கு கூட நிதியை திரட்டிக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.தற்போதைய பொருளாதார…
The post அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை இயற்றாமையால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது: பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை இயற்றாமையால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது: பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
