23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
6 view
எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை(28) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு செவ்வாய்கிழமை(29) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
The post 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
