குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!
14 view
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள் இந்த தாகுதலுக்கு முகம்கொடுத்துள்ளனர். பாடசாலையில் இருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடு தீடீர் என கலைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
The post குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
