குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம்!

6 view
குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ், முன்னணி மருத்துவமனைகளில் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் எதிர்வரும் மாதங்களில் செவிலியர்களுடன் மறியலில் ஈடுபடுவதை கருத்தில் கொள்வதால், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தற்செயல் மூலோபாயத்தை உருவாக்குகின்றனர். தி டைம்ஸ் அறிக்கையின்படி, தேசிய சுகாதார சேவையின் முக்கிய சேவைகளை இயக்குவதற்கு அரசாங்கம் சிவில் அதிகாரிகளின் நெறிமுறைக்கு இராணுவ உதவியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் முறையான உதவி கோரப்படவில்லை. ஆனால் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ‘தொழில்துறை நடவடிக்கைகளின் போது சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு ஏற்படும் இடையூறுகளை நிர்வகிப்பதற்கான பல்வேறு விருப்பங்களில் தேசிய சுகாதார சேவை உடன் இணைந்து செயல்படுவதாகக் கூறினார். கிறிஸ்மஸுக்கு முன்னதாக வேலைநிறுத்தங்கள் மீளப் பெறப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என நம்பப்படுகின்றது. முன்னதாக, தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் போராடும்…
The post குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース