யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
6 view
யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.
The post யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
