எழுச்சிக்கோலம் பூண்டுள்ள இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்!
16 view
தமிழர் தாயக பகுதிகளில் இன்றைய தினம் (27.11.2022) மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாயக பூமி எங்கும், சிவப்பு – மஞ்சள் கொடிகளுடன் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிப்பதற்கான தருணத்திற்காக தாயக சொந்தங்கள் தயாராகியுள்ளனர். தாயகம் மாத்திரமின்றி ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளுடன் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளமையை காண கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post எழுச்சிக்கோலம் பூண்டுள்ள இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எழுச்சிக்கோலம் பூண்டுள்ள இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
