சீன அரசுக்கும் மக்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு
6 view
கொழும்பு, நவ 27 எமது மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கி வருகின்ற சீன அரசாங்கம், தற்போது 90 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளமை பேருதவியாக எமது மக்களுக்கு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீன அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.. முன்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சீன அரசாங்கத்தினால் இலங்கையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் என அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த 9,000 மெற்றிக்தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்நிலையில் இன்றையதினம் அதனை சம்பிரதாயபூர்வமாக வழங்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றதுஃ இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிம் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இந்நிலையில்…
The post சீன அரசுக்கும் மக்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன அரசுக்கும் மக்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
