மானிட விடுதலையை நேசித்து தம்மை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள்-ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை!
6 view
மானிட விடுதலையை நேசித்து தமை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள் மாவீரர்நாள் என மாவீரர் நாள் தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமது இனம் வாழ்வுரிமை இழந்து தமது நாட்டுக்குள்ளேயே ஏதிலிகள் ஆக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அகிம்சை முறையிலும் அரசியல் ஊடாகவும் தீர்வுகள் எட்டப்படா நிலையில் தமது சந்ததியாவது இலங்கை தீவில் தங்களது பூர்வீக நிலங்களில் ஆட்சி உரித்துடன் வாழ்வதற்கு தமது இளமை காலங்களை துறந்து உறவுகளை பிரிந்து தமது இன்னுயிரை அர்பணிக்க புறப்பட்ட அற்புதமானவர்கள்தான் எமது மாவீரர்கள். அவர்களின் தியாகங்களையும் மாண்புகளையும் நினைவில்கொள்ளும் புனித நாள் ஈழத்தமிழினம் இந்த மண்ணிலே தனக்கேயுரிய வரலாற்று மாண்புகளுடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழவேண்டுமெனின் நாம் எமக்கேயான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென திடசங்கற்பம் கொண்டு போராடி தமது இன்னுயிரை இந்த மண்ணிற்காய் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவு கூறும் நாள் ஜனநாயக…
The post மானிட விடுதலையை நேசித்து தம்மை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள்-ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மானிட விடுதலையை நேசித்து தம்மை ஆகுதியாக்கியோரை நினைவில் கொள்ளும் மகத்தான நாள்-ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
