இலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்!
6 view
பதுளை மாவட்டத்தில் தந்தையை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (26-11-2022) மாலை 6 மணியளவில் பதுளையில் இடம்பெற்றுள்ளது. மேற்கு, பெருந்தோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ஊமை மகன் ஒருவர், தனது 60 வயதுடைய தந்தையை மரத்தடியால் தலையில் தாக்கி கொலைசெய்துள்ளார். தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், போலீசார் மகனை கைது செய்தனர். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த இளைஞனின் தாயாருக்கு இரண்டு திருமணங்கள் இருந்ததாகவும், முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், தாயின் இரண்டாவது கணவர் மகனால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
The post இலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
