ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச!
6 view
ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச! 22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், ராஜபக்ச குடும்பத்திற்குள் சில காலமாக நிலவி வந்த குடும்பச் சண்டை முதன்முறையாக பொது வெளிக்கு வந்துள்ளது. பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. பதவிகளை வகிக்க முடியாது என்ற ஷரத்தும் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் இருந்தது. சமல் ராஜபக்ஷ, ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச வாக்களிக்கவில்லை. மறுபுறம், பசில் ராஜபக்ஷவுக்கும் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. இவ்வாறானதொரு பின்னணியில், அரசியல் பயணங்கள் முழுவதிலும் குரஹான் சால்வை அணிந்து வந்த சமல் ராஜபக்சவின் மகன் ஷசீந்திர ராஜபக்ச, இன்று முதல் தடவையாக குரஹான் சால்வை அணியாமல் நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஷசீந்திர ராஜபக்ச தோளில் சால்வை அணியாமல்…
The post ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல் – சால்வையை தூக்கி எறிந்தார் சசீந்திர ராஜபக்ச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
