மாகாண சபை தேர்தல் முறையிலுள்ள சட்டசிக்கலுக்கு தீர்வு! – பிரதமர்
27 view
நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிக்கையை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவர் அதற்கு எதிராக வாக்களித்தமை நகைப்புக்குரியது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறான சம்பவம் முன்னொருபோதும் பதிவாகவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் 154 ஆவது அத்தியாயத்தின் (டி) பிரிவில் ‘மாகாண சபை தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில் குறித்த மாகாணத்தின் மாவட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாராளுமன்ற சபை என்ற அடிப்படையில் குறித்த மாகாணத்தின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து ஆராயலாம் ‘ என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய செயற்பட தயாராயின் அது குறித்து அவதானம் செலுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும்…
The post மாகாண சபை தேர்தல் முறையிலுள்ள சட்டசிக்கலுக்கு தீர்வு! – பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபை தேர்தல் முறையிலுள்ள சட்டசிக்கலுக்கு தீர்வு! – பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
