நாமலின் மாமனாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 170 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது ? – ஹேஷா விதானகே கேள்வி!
35 view
உதைப்பந்தாட்ட போட்டியை நடத்துவதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மாமனாரின் நிறுவனத்திற்கு 170 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆனால் குறித்த நிதிக்கு இதுவரை என்னாயிற்று என்பது தொடர்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் அமைச்சராக பதவியேற்ற போது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்தில் ஏதேனும் முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், விரல் நீட்டி சுட்டிக்காட்டும் அளவிற்கு கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேறத்திற்கு…
The post நாமலின் மாமனாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 170 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது ? – ஹேஷா விதானகே கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாமலின் மாமனாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 170 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது ? – ஹேஷா விதானகே கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
