அமிதாப் பச்சனின் அடையாள பண்புகளை அனுமதியின்றி பயன்படுத்த மேல்நீதிமன்றம் தடை
27 view
இந்தியாவின் முன்னணி பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனின் குரல், உருவம், பெயர் அல்லது அவருடன் பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பண்புகளையும் அனுமதியின்றி பயன்படுத்த புதுடெல்லி மேல்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘கேபிசி லொத்தர்’ மோசடிக்கு பின்னால் உள்ள ஒருவர் உட்பட பலர், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தனது குரலை பயன்படுத்துவதை ஆட்சேபித்து அமிதாப் பச்சன் தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 80 வயதான அமிதாப் பச்சன் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கவுன் பனேகா க்ரோர்பதியின் தொகுப்பாளராக செயற்படுகிறார். இவர் நன்கு அறியப்பட்ட ஆளுமை என்பது மறுக்க முடியாது. இந்த நிலையில் அவருக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால் ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் அவப்பெயரை சந்திக்க நேரிடும் என்றும், தமது உத்தரவில் நீதிபதி நவீன் சாவ்லா கூறியுள்ளார். இதேவேளை பச்சனின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளடக்கத்தை வழங்கும் இணையதளங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும்…
The post அமிதாப் பச்சனின் அடையாள பண்புகளை அனுமதியின்றி பயன்படுத்த மேல்நீதிமன்றம் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமிதாப் பச்சனின் அடையாள பண்புகளை அனுமதியின்றி பயன்படுத்த மேல்நீதிமன்றம் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
