தமிழீழத் தனியரசுக்காக வித்தானவர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்- தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அறைகூவல்!
14 view
கார்த்திகை 27 இன்று தமிழீழ தனியரசு கனவுடன் எம் மண்ணில் வித்தாகிப் போன மாவீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்வதற்கு தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாம் எமது மாவீரர்களையும் அவர்களுக்கான நாட்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டிய தேவையும், கடமையும், தார்மீக உரிமையும் எமக்கு உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு சில ஆண்டுகள் எம்மால் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அஞ்சலிகளை செய்ய முடியாத ஒரு பாரதூரமான சூழ்நிலை காணப்பட்டது. எமது துயிலும் இல்லங்களில் இருந்த மாவீரர் கல்லறைகள் சிறிலங்கா…
The post தமிழீழத் தனியரசுக்காக வித்தானவர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்- தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழீழத் தனியரசுக்காக வித்தானவர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்- தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
