ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர்- சுஐப் எம்.காசிம் சுட்டிக்காட்டு!
6 view
சகலரையும் ஒருதாய் உணர்வில் இணைக்கும் தீர்வுத் திட்டத்துக்கு உழைக்க ஜனாதிபதி தயாராகிறார். ‘ஏனையோர் தயார்தானா?’ எனவும் வினவுகிறார். எல்லோரையும் எப்படி ஒருதாய் உணர்வில் இணைப்பது? அவ்வாறானால், அரசியலமைப்பில் சில விடயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிச்சிறப்புக்கள் நீக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இன கோட்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிச்சிறப்பு, சிங்கள மொழிக்குள்ள விஷேட முன்னுரிமை, மத்திய அரசாங்கம் கையாளும் உச்ச அதிகாரம், அதிகாரங்களைப் பகிர்வதில் உள்ள அலட்சியம், காணிப்பங்கீடுகளில் காட்டப்படும் பாரபட்சம் இன்னும் இதுபோன்றன இல்லாமலாக்கப்பட்டால்தான், ஒரே தாயின் நீதி எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். நூறு பிள்ளைகள் இருந்தாலும் தாயின் பங்கீட்டில் பாரபட்சம் இருக்காது. அவ்வாறு இருந்தாலும் தாயின் இயலாமையை பிள்ளைகள் புரிந்துகொண்டு செயற்படும். இந்நிலையை ஏற்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புறப்பட்டுள்ளார். இதைத்தானே எல்லோரும் முயற்சித்தனர். எந்த ஜனாதிபதிக்கும் இது முடியாமல் போய்விட்டதே! இருந்தாலும் இவர் உழைக்கவுள்ள சூழல் வேறுபட்டிருக்கிறது. பிரிவினையும் போரும், பகையும் நமது நாட்டவர்களை பசியால் பதம் பார்த்துள்ள சூழலிது. இந்தப் பசி…
The post ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர்- சுஐப் எம்.காசிம் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர்- சுஐப் எம்.காசிம் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
