மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!
28 view
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதை அடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தரம் 8 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆரம்ப பிரிவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து அகப்பையினால் குறித்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவன் மயக்க முற்றுள்ளான். பின்னர் கூட சென்ற மாணவர்கள் கதவை உதைத்து உட்சென்று குறித்த மாணவனை மீட்டதுடன், ஆசிரியையை அங்கு அடைத்துவிட்டு முதலுதவி செய்ததுடன் பாடசாலை அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும், மாணவன் சிகிச்சைக்குட்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தந்தையை…
The post மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
