இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அழைப்பு
12 view
வெளிநாட்டு கடன்வழங்குநர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை வேகமாக மோசமடைந்து மக்களின் அடிப்படை தேவைகளை மேலும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு, சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான இறுதி அனுமதியைப் பெற முடியும். அத்துடன், பிற உலகளாவிய முகவர்களிடமிருந்தும் நிதியுதவி பெற முடியும். கடந்த ஏப்ரலில், சர்வதேச கொடுநர்களுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன்களை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியது. இந்தநிலையில், கடந்த செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியத்துடன் நான்கு வருட, 2.9 பில்லியன் பிணை எடுப்புக்கான பணியாளர் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியது. அந்த பிணை எடுப்பின் முதல் தவணையானது அந்நியச் செலாவணியின் பற்றாக்குறையை எளிதாக்குவதுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பிற நிதியுதவிக்கான…
The post இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
