டி.ஏ.ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

13 view
மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது. ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் நெதகமுவே விஜய மைத்திரி தேரர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இதன்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்தோடு, மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, ‘ஒரே திசை – ஒரே பாதை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும்…
The post டி.ஏ.ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース