வங்கிகளில் கடன் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
6 view
இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கான விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் குறித்த வங்கிகளை தொடர்புகொண்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை.பி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர் ஒருவர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நிதி வாடிக்கையாளர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
The post வங்கிகளில் கடன் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கிகளில் கடன் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
