ஜி-20 உச்சி மாநாடு ஆரம்பம் – அமெரிக்க, சீன தலைவர்கள் பங்கேற்பு!
16 view
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜலன் நுசா துவாவில் ‘ஜி-20’ அமைப்பின் 2 நாட்களுக்கான உச்சி மாநாடு இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாட்டில் அர்ஜெண்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் இதில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியா சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு பாலி விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 ஆம் திகதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க உள்ளதால், மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேஷிய ஜனாதிபதியிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமை பொறுப்பை…
The post ஜி-20 உச்சி மாநாடு ஆரம்பம் – அமெரிக்க, சீன தலைவர்கள் பங்கேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜி-20 உச்சி மாநாடு ஆரம்பம் – அமெரிக்க, சீன தலைவர்கள் பங்கேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
