புதுப்பொழிவுடன் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதன்கிழமை திறப்பு!
2 view
புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படையின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த பேருந்து நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
The post புதுப்பொழிவுடன் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதன்கிழமை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுப்பொழிவுடன் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புதன்கிழமை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
