தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசங்கார நிகழ்வு..!
12 view
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது. நேற்று மாலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று சூர சங்கார நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வருகை தந்திருந்தனர். அதேவேளை நல்லூர் உள்ளிட்ட முருகன் ஆலயங்களிலும் நேற்றையதினம் சூரசங்கார நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசங்கார நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசங்கார நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
