கிண்ணியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி..!
12 view
திருகோணமலை மட்டக்களப்பு வீதியில் நேற்றையதினம்(16) இரவு பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடிரென தீப்பிடித்து எரிந்துமுற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் கிண்ணியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூதூரில் இருந்து கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி, முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post கிண்ணியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
