கட்டுமரம் கவிழ்ந்ததில் யாழில் கடற்தொழிலாளி பரிதாப மரணம்..!
17 view
யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த 69 வயதான கடற்றொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். தனது கட்டுமரத்தில் கடற்றொழிலுக்காகக் கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில் இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த கடற்றொழிலாளியின் சடலம் சக கடற்தொழிலாளிகளால் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
The post கட்டுமரம் கவிழ்ந்ததில் யாழில் கடற்தொழிலாளி பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுமரம் கவிழ்ந்ததில் யாழில் கடற்தொழிலாளி பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
