கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பருப்பு மீட்பு
9 view
மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்றையதினம்(13) இடம்பெற்ற சோதனையொன்றின்போதே மனித பாவனைக்குப் பொருத்தமற்ற குறித்த பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த களஞ்சிய சாலையுடன் தொடர்புடைய வர்த்தகர், பருப்பை மீளப் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
The post கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பருப்பு மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பருப்பு மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
