யாழ். கொழும்புத்துறையில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!
14 view
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.
The post யாழ். கொழும்புத்துறையில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். கொழும்புத்துறையில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
