கம்பஹாவில் நீரில் மூழ்கி இளைஞன் பரிதாப மரணம்..!
11 view
கம்பஹா, கெடவல, அனிகட்டில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு(03) இடம்பெற்றது. அதேவேளை, உயிரிழந்த நபரும் ஏனையவர்களும் குறித்த இடத்தில் நீராடச் சென்றிருந்த நிலையில், உயிரிழந்த நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர் உடுகம்பலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post கம்பஹாவில் நீரில் மூழ்கி இளைஞன் பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கம்பஹாவில் நீரில் மூழ்கி இளைஞன் பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
