நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது!
8 view
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
