சீன அரசினால் யாழ்ப்பாணத்துக்கு மீன் வலைகள்
23 view
சீன அரசினால் யாழ். மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வலைகள் தற்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 26 ஆயிரத்து 700 வலைகள் (பீஸ்) ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் உதவித்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கு வலைகள் வழங்குவதற்காக 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post சீன அரசினால் யாழ்ப்பாணத்துக்கு மீன் வலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன அரசினால் யாழ்ப்பாணத்துக்கு மீன் வலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
