ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!
11 view
கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தெமோதர கவரவெல பிரதேசத்தில் நேற்று (26) காலை இடம்பெற்றது. தெமோதர, கவரவெல பிரிவு என்ற முகவரியில் வசித்து வந்த 26 வயதுடைய ஜெபமாலா மரியஞ்சோதி பெர்ணான்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சடலம் அதே ரயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, ஹாலிஎல்ல நிலையத்தில் எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
The post ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
