வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் – மாத்தளையில் சம்பவம்
8 view
மாத்தளையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தளையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக இன்று காலை 8 மணியளவில் குறித்த பாதிரியார் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, அவர் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாதிரியார் 4 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் – மாத்தளையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் – மாத்தளையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
