பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை அதிகாரிகள் கைது..!
10 view
பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (30) கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
The post பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை அதிகாரிகள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவிய கடற்படை அதிகாரிகள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
