இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் இராஜினாமா- இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு
6 view
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கிறிஸ் சில்வர்வுட் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் இராஜினாமா- இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் இராஜினாமா- இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
