மூதூர் பாடசாலையில் விபரீதம்- 30 மாணவர்கள் வைத்தியசாலையில்…! நடந்தது என்ன?
14 view
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மூதூரில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் இன்று(25) இரவு இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள பாடசாலையொன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகினர். இந்நிலையில் 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
The post மூதூர் பாடசாலையில் விபரீதம்- 30 மாணவர்கள் வைத்தியசாலையில்…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூர் பாடசாலையில் விபரீதம்- 30 மாணவர்கள் வைத்தியசாலையில்…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
