இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்…!
7 view
கிளிநொச்சியில் இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், தீர்வுகளையும் முன்வைத்தார். குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
