மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!
5 view
சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
