ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கிய மாங்குளம் பொலிசார்..!
9 view
வெசாக் பௌர்ணமி தினத்தில் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் கிரிந்தே உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏ9 பிரதான வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் மாங்குளம் கிராமத்தினுடைய மக்கள் என பலருக்கும் ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கிய மாங்குளம் பொலிசார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கிய மாங்குளம் பொலிசார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
