மின்னல் தாக்கி அண்ணன், தங்கை பரிதாப மரணம்..! இலங்கையில் பெரும் துயரம்
38 view
மாத்தளை – இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மின்னல் தாக்கி அண்ணன், தங்கை பரிதாப மரணம்..! இலங்கையில் பெரும் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்னல் தாக்கி அண்ணன், தங்கை பரிதாப மரணம்..! இலங்கையில் பெரும் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
