வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்…! யாழில் போராட்டத்தில் குதிக்கவுள்ள பட்டதாரிகள்…!
8 view
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29)யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மேலும் தெரிவிக்கையில், எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன் எங்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கையில் மிக நீண்ட காலமாக பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சனை நிலவி வரும் சூழலில் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இலங்கையின் கல்வித் திட்டத்தின் கீழ் 20 வருடங்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறி பின்னர் சாதாரண கூலித் தொழிலுக்கே சென்று வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டிய மனச் சங்கடமான நிலையினையே எதிர்கொள்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் தமது எதிர்கால கனவுக்காக…
The post வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்…! யாழில் போராட்டத்தில் குதிக்கவுள்ள பட்டதாரிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்…! யாழில் போராட்டத்தில் குதிக்கவுள்ள பட்டதாரிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
